தேர்தல் ஆணையர் பதவி காலியிடம்.. நிரப்புவது தொடர்பாக பிரதமர் குழு மார்ச் 15ல் ஆலோசனை

Mar 10, 2024,09:11 PM IST

டெல்லி: 2 தேர்தல் ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அந்த இடங்களை நிரப்புவது தொடர்பாக பிரதமர் நரந்திர மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு மார்ச் 15ம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.


தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு காலியிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்ததால், ஆணையர்களின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்து விட்டது. அதாவத 3 பேர் கொண்ட ஆணையத்தில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே இருக்கிறார். மற்ற இரு ஆணையர் பதவிகளும் காலியாக உள்ளன.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பல்வேறு விவாதங்களும், கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில் 2 தேர்தல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான குழு மார்ச் 15ம் தேதி கூடி ஆலோசிக்கவுள்ளது.




இக்குழுவில் பிரதமர் தவிர பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்தக் குழு கூடி தேர்தல் ஆணையர்களாக யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கும்.  


தேர்தல் ஆணையம் ஒரு ஆணையரோடு பணியில் இருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையராக நசீம் ஜைதி பதவியேற்றபோது, அவர் மட்டுமே உறுப்பினராக இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆணையர் ஒரு ஆணையரோடுதான் செயல்பட்டது. அதன் பின்னர்தான் மே மாதம் ஏ.கே.ஜோதியும், ஆகஸ்ட் மாதம் ஓ.பி. ராவத்தும் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இருப்பினும் அப்போது பெரிய அளவில் தேர்தல் ஏதும் இல்லாததால் சர்ச்சை எழவில்லை. ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆணையம் ஒற்றை ஆணையரோடு இருப்பது பரபரப்பாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்