நாடாளுமன்றத்தில் ஒரு பக்கம் அனல்.. மறுபக்கம் எம்.பிக்களுடன் விருந்துண்ட பிரதமர் மோடி!

Aug 04, 2023,09:57 AM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒரு பக்கம் எதிர்க்கட்சி எம்.பிக்களின் தொடர் போராட்டத்தால் இரு சபைகளுக்குள்ளும் அனல் வீசி வரும் நிலையில் மறுபக்கம் தென்னிந்திய எம்.பிக்களுடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.

இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அந்த டிவீட்டில், நேற்றுமாலை தென்னிந்தியாவைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்களுடன் அருமையான சந்திப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பான டின்னர் இடம் பெற்றது. அதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த உணவு வகைகள் பரிமாறப்பட்டன.  பணியாரம், அப்பம், வெஜிடபிள் குருமா, புளியோதரை, பப்பு சாரு, அடை அவியல் என ஏகப்பட்ட ஐட்டங்கள் இடம் பெற்றன என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.



இந்த சந்திப்பின்போது தென்னிந்திய எம்.பிக்களுடன் மனம் விட்டுப் பேசினாராம் பிரதமர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வைக்கும் வாதங்களுக்கு சரியான விவாதம் நடத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டாராம். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். ஜி.கே.வாசனை தனக்கு அருகே அமர வைத்து பாசத்துடன் பேசினாராம் பிரதமர்.

தமிழ்நாடு,  கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் இதில் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய உணவுகளை பிரதமர் ருசித்து உண்பது இது ��ுதல் முறையல்ல. கடந்த ஆண்டு அவர் கர்நாடகம் வந்திருந்தபோது மைசூரு ராஜ குடும்பத்து வீட்டு விருந்தை ரசித்துச் சாப்பிட்டார். குறிப்பாக மைசூர் பாக், மைசூர் மசாலா தோசை ஆகியவற்றை அவர் ருசித்துச் சாப்பிட்டார் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல முன்பு மாமல்லபுரம் வந்திருந்தபோதும் கூட பிரதமருக்கு தமிழ்நாட்டு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்