சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தில் படித்த பன்னிரண்டாம் மாணவர்களுக்கான பொது தேர்வுகள் இன்று காலை 10 தொடங்கியது. மாநில முழுவதும் 7,518 பள்ளிகளை சேர்ந்த 8.21 லட்சம் மாணவ மாணவியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்காக 3316 மையங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிறப்பு தனி தேர்வாளர்கள் 20,000 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வுகளுக்காக மாணவர்கள் ஒன்பது நாற்பத்தி ஐந்து மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்பட்டு பத்து முதல் 10.15 வரை கேள்வித்தாள்களை படித்துப் பார்க்கும் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 10. 15 முதல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெற்று வரும் தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்ட வாரியாக சிறப்பு கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14417 என்ற இலவச உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு தேர்வுகள் தமிழ் மொழிதேர்வுடன் தொடங்கியது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.அதே சமயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களை சந்தித்து நல்லா எழுதுங்க மாணவர்களே எனக்கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!