பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியானது.. 94.56% பேர் தேர்ச்சி.. மாணவியரே வழக்கம் போல அதிகம் பாஸ்!

May 06, 2024,06:23 PM IST

சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள இணையதளங்களை அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட 8.51 லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ்டூ தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம் முடிவுகளை வெளியிட்டார். தேர்வு முடிவுகளை அறிய இணையதளங்களை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.


https://dge.tn.gov.in/

https://www.tnresults.nic.in/wpprex.htm




2023ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வை எழுதியோரில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தார்கள். 2022ம் ஆண்டு இது 93.80 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதி க அளவிலான மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26ல் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தன என்பது நினைவிருக்கலாம்.


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்