கொரோனாவுக்குப் பின்.. தொடர்ந்து உயர்ந்து வரும் மாணவர் தேர்ச்சி விகிதம்.. ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

May 06, 2024,06:23 PM IST

சென்னை: பிளஸ்டூ தேர்ச்சி விகிதம், கொரோனா காலத்துக்குப் பிறகு கடந்த மூன்று தொடர்ந்து உயர்ந்து வருவது ஆசிரியர்களை, மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக  இந்த வருடம் பிளஸ் டூ  தேர்வில் தேர்ச்சி விகிதம் 94.56 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது. 


கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா பரவல் வளைக்கத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. லாக்டவுன் வந்தது. அப்போது மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். இதனால் அவர்களின் படிப்பு மந்தமாகவே காணப்பட்டு வந்தது. அப்போது நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் பாடங்கள் குறைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அதிலும் மாணவர்கள் சரியாக தேர்வு எழுதாமல் தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருந்தது.


2021ம் ஆண்டு தேர்வு நடத்தவில்லை. மாறாக ஆல் பாஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து கொரோனா ஒழிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் வழக்கம் போல பள்ளிகளும் இயல்பு நிலைக்குத் திரும்பின. தேர்ச்சி விகிதமும் திருப்திகரமாக மாறத் தொடங்கியது. கடந்த இரண்டு வருடங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் தேர்வு விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2023 ஆம் ஆண்டு 94.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அதைவிட கூடுதலாக இந்த வருடம் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 




நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற்றது. இதில் 3,58, 201 பேர் மாணவர்களும், 4,19,998 மாணவிகளும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் பிளஸ் டூ தேர்வு எழுதினார். இதற்கான தேர்வு முடிவு இன்று வெளியானது.


வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்கள் 92.37% பேரும், மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த 3 வருடங்களாக வருடா வருடம் தேர்ச்ச விகிதம் உயர்ந்து கொண்டே செல்வது ஆசிரியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் 100 சதவீத தேர்ச்சி என்ற அபார சாதனையை நிச்சயம் நம்மால் அடைய முடியும் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து


இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற  மாணவ மாணவியருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,  பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளவும்  வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்