பிதாமகன் தயாரிப்பாளர் வி. ஏ. துரை மரணம்

Oct 03, 2023,07:53 AM IST

சென்னை: பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவரான தயாரிப்பாளர் வி.ஏ. துரை மரணமடைந்தார்.


கஜேந்திரா, லவ்லி, லூட்டி, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் வி.ஏ. துரை. ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தையும் இவர்தான் தயாரித்தார்.  படத் தயாரிப்புத் தொழில் நலிவடைந்து போனதால், துரையும் நொடித்துப் போயிருந்தார். சிரமமான நிலையில் இருந்து வந்த அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது. 




சர்க்கரை நோய் அதிகமாகி ஒரு காலை எடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்த அவர் நேற்று இரவு தனது வீட்டிலேயே மரணமடைந்தார். அவருக்கு வயது 69. காலமான வி.ஏ. துரைக்கு,விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவியர் உண்டு. 


முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என இரு மகள்களும், 2வது மனைவிக்கு கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் சென்னை வளசரவாக்கம் கடம்பாடி அம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்


வி.ஏ. துரை மறைவுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினரும், பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு போன்ற மாபெரும் வெற்றிப்பட தயாரிப்பாளருமான வி. ஏ. துரை அவர்கள் சற்று முன்பு காலமாகிவிட்டார் என்பதை  வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 


அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்