எல்லா செடிகளும் வாடி வதங்கினாலும்.. வாடாமல் பளிச்சென இருக்கு பாருங்க.. அதுதான் பிரண்டை!

Apr 15, 2024,05:55 PM IST

- சந்தனகுமாரி


பார்ப்பதற்கு பச்சை பசேல் என்று அழகிய தோற்றத்துடன் காணப்படுவது தான் பிரண்டை கொடி. இது பொதுவா வேலியோரமா தான் அதிகமாக வளரும். வேலியில் அனைத்து செடிகளும் வாடி வதங்கியது போல் காணப்படும் . அதன் நடுவில் பிரண்டை மட்டும் பச்சை பசேல் என்று இருக்கும் . இந்தப் பிரண்டைக்கு வச்சிரவல்லி அப்படின்னு இன்னொரு பெயரும் இருக்கு. 


பிரண்டை கொடி மூலிகை வகைகளில் ஒன்றாகும். பார்ப்பதற்கு அடுக்கடுக்காய் தொடர்ந்து கொண்டே செல்வது போல இருக்கும். கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பிரண்டை உடம்புக்கு ரொம்ப நல்லதுங்க.


பிரண்டையைப் பார்ப்பதற்கு நான்கு குணங்களில் சதுரமாக இருக்கும். சொல்லப்போனா சதுர கட்டம் அடுக்கடுக்கா இருந்தா எப்படி இருக்குமோ அதே போல தான் இருக்கும். உருட்பிரண்டை, முப்பிரண்டை, ஓலை பிரண்டை, இனிப்பு பிரண்டை, புளிப்பு பிரண்டை என பல வையான பிரண்டை செடிகள் உள்ளன.


பிரண்டையோட குணாதிசயங்கள்:




பசியாற பிரண்டை என்ற பழமொழிக்கு ஏற்ப பசியை தூண்டக்கூடியது பிரண்டை. பசியே எடுக்க மாட்டேங்குதுன்னு டாக்டர் கிட்ட போகணும்னு அவசியம் இல்ல, இந்த பிரண்டை இருக்கிற வரைக்கும். ஆமாங்க பசியின்மையை போக்க வல்லது இந்தப் பிரண்டை. எவ்வளவுதான் வேலை பார்த்தாலும் உடல் அசதியாக இருந்தாலும் பசிக்க மாட்டேங்குது அப்படின்னு சொல்றவங்க இந்தப் பிரண்டையை எடுத்து துவையல் செஞ்சி சாப்பிட்டாச்சா டேஸ்ட்டும் அள்ளும் பசியையும் தூண்டும்.


பிரண்டை துவையல்ல கொஞ்சம்  புளியும் கொஞ்சம் நல்லெண்ணையை சேர்த்து செஞ்சோம்னா ஐயோ அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். அதுக்கு பிறகு அடிக்கடி சாப்பிட தோணும் உங்களுக்கு. ஜீரண சக்தியும் அதிகமாகும்.  இந்த காலத்துல யாரும் பிரண்டைய நேர்ல பார்த்திருப்பாங்களான்னு டவுட்டா இருக்குது, அந்த அளவுக்கு செடிகளைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. 


நாங்க காட்டுக்கு செல்லும் போது அங்கு அதிக அளவுல பிரண்டை கொடி இருக்கும். அதையெல்லாம் பறிச்சிட்டு வந்து அம்மா கிட்ட கொடுத்தா, சூப்பரா துவையல் வச்சு தருவாங்க. நார்மலா ரெண்டு இட்லி சாப்பிடுறவங்க அந்த பிரண்டை துவையல் இருந்தா கண்டிப்பா அஞ்சு இட்லி சாப்பிடுவார்கள். ஏன்னா அந்த பிரண்டை துவையலுக்கு அவ்வளவு சக்தி இருக்கு. பிரண்டை துவையல் எப்படி செய்யணும்னு தெரியுமா.. ரொம்ப ரொம்ப ஈசி.. வாங்க அதையும் பார்க்கலாம். 


ரண்டையை ஒடிக்கும்போது அதோட நுனியில் உள்ளது மட்டும்  எடுக்கணும். ரொம்ப அடியில் போயிட்டா  நார் நாரா இருக்கும். பிரண்டை இலையோ , பூவோ தேவைபடாது. அந்த தண்டு மட்டும்தான் நம்மளுக்கு தேவை. அது ஒடிச்ச பிறகு அந்த நாரை உறிச்சி எடுக்கணும். சுத்தம் பண்ணும் போது கை  அரிக்கும். சுத்தம் பண்ணி முடிச்சதும் கையில எண்ணெய் தேய்ச்சா சரியாயிடும். பிரண்டை தோலை நன்கு நீக்கிய உடன் தண்ணீரில் நல்லா கழுவிட்டு, நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதுகூட கொஞ்சம் உளுந்து, சின்ன  வெங்காயம், வெள்ளை பூண்டு, புளி ,கொஞ்சம் தேங்காய், காய்ந்த வத்தல் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் சட்னி போல் வைத்து சாப்பிட்டால் ருசியோ ருசி அம்புட்டு ருசி. சொல்றப்பவே சாப்பிடணும் போல தோணுது.


பிரண்டையை நன்கு சுத்தம் பண்ணிட்டு புளிச்ச மோரில் போட்டு ஊற வைத்துவிட்டு மறுநாள் வெயிலில் காய வைத்து வடகம் போல செய்து சாப்பிட்டால், சூப்பரா இருக்கும், இது  வெற லெவல் சைடிஸ். உடைந்திருக்கும் எலும்பைக் கூட சரி செய்யுமாம் பிரண்டை. அப்படின்னு சொல்றாங்க. அந்த காலத்துல எலும்பு வலி என்று யாரும் மருத்துவமனைக்கு போக மாட்டாங்களாம். சித்த மருத்துவர் கிட்ட போய் கேட்டா அவர் பிரண்டையை வைத்து தான் எலும்பு நோயை சரி பண்ணுவாராம். அந்த அளவுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பிரண்டை பயனுள்ளதாக இருக்குது. இந்தப் பிரண்டையில் இருக்கும் சுண்ணச்சத்து உடைந்த எலும்பையும் சரி செய்யும் சிறப்பு மருந்தாகும். உண்மையைச் சொல்லப்போனால் சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த அற்புத மருந்துகளில் ஒன்றாகும்.


கால்சியம் குறைபாடு  உள்ளவர்கள் உணவில் அவ்வப்போது பிரண்டையை சேர்த்து சாப்பிட வேண்டும். ஏனென்றால் கால்சியம் சத்துக்கள் பிரண்டையில் அதிக அளவு உள்ளது. நாம் கால்சிய மாத்திரை சாப்பிடுவதற்கு பதிலாக பிரண்டையில் ஏதாவது ஒரு ரெசிபி செய்து சாப்பிடுவதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்கு கிடைக்கிறது. இனி யாராவது கால்சியம் மாத்திரை சாப்பிடுபவர்களை கண்டால் பிரண்டையை பற்றி எடுத்துக் கூறுங்கள்.


உடல் வீக்கம், உடலில் தேவையற்ற வலி, அளவுக்கு அதிக கொழுப்பு, எலும்பு முறிவு பிரச்சனை ஆகியவற்றிற்கு பிரண்டை சிறந்த மருந்தாக உதவுகிறது. பற்களின் பலத்தையும் பிரண்டை அதிகப்படுத்துகிறது. முறையற்ற உணவு பழக்கவழக்கங்களினால் ஏற்படும் உடல் பருமனையும் பிரண்டை குறைக்க வல்லது.


எந்த ஒரு தாவரத்திலும் ஆண் , பெண் என்று பிரித்துப் பார்ப்பது மிக கடினம். ஆனால் பிரண்டையில் ஆண், பெண் என்று  அதன் இனத்தை கண்டறியலாம். நம்பவே முடியல பாத்திங்களா.. ஆனா கண்டுபிடிக்கலாம்னு சித்த மருத்துவர்கள் கூறுகின்றார்கள். பிரண்டையின் தண்டு கணுக்களுக்கு இடையே இடைவெளி அதிகம் இருப்பின் அது ஆண் வகையாம். இடைவெளி குறைவாக இருப்பின் அது பெண் வகையாம். ஆண் வகை பிரண்டை ஆண்களுக்கும் ,பெண் வகை பிரண்டை பெண்களுக்கும் மருந்தாக பயன்படுத்தும் போது பலன்கள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இப்போ பிரண்டை செடிக்கு எங்க போவது எங்கு கிடைக்கும் என்று யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா. அதிகமா கிடைக்கிறது கிராமங்களில்  தான். நகரங்களில் கிடைக்கவில்லையென்றால்  பிரண்டை பொடி, பிரண்டை ஆயில், பிரண்டைத் தொக்கு இப்படி நிறைய கிடைக்க ஆரம்பித்துவிட்டது. மருத்துவ குணம் கொண்ட பிரண்டையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவோம். நோயற்ற வாழ்வை எதிர்கொள்வோம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்