வயிற்றில் பால் வார்க்குமா மத்திய அரசு.. லோக்சபா தேர்தலுக்கு முன் பெட்ரோல் விலை குறைக்கப்படுமா?

Jan 24, 2024,05:04 PM IST

புதுடில்லி: இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


லோக்சபா தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் விறுவிறுப்பாக தேர்தலுக்கான வேலைகளை செய்ய தொடங்கியுள்ளன. தேர்தல் அறிக்கை, யாருடன் கூட்டணி, என்ன திட்டங்களை அறிவிக்கலாம் என பல்வேறு விதமான செயல்களில் கட்சிகள் மும்முரமாகியுள்ளன. இந்நிலையில் மத்தியில் ஆளும் கட்சி என்ன என்ன திட்டங்களை வெளியிடும் என்று பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.


முதல் கட்டமாக தேர்தலுக்கு முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெகுவாக குறைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்தில் தான் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும், வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் குறைந்தது. இந்த விலை குறைப்பை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.




இந்தியாவில் கடந்த வருடம் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் அனைத்து விலையும் உயர்ந்தது. நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல் விலையால் மக்கள் மிகுந்த கவலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பின்னர் 5 மாநிலத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. 


இந்நிலையில் மக்கள் நலன் கருதி இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு  பெட்ரோல் விலையை குறைக்கும் படி மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டி வருகிறது பாஜக அரசு.


பெட்ரோல் விலைக் குறைப்பு மட்டுமல்லாமல் மக்களுக்கு பலன் தரக் கூடிய மேலும் பல திட்டங்களையும் அடுத்தடுத்து மத்திய அரசு அறிவிக்கலாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பும் உள்ளது. இதுதவிர இடைக்கால பட்ஜெட்டிலும் கூட பல அறிவிப்புகள், சலுகைகளை மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்