கிலோ ரூ.60 தக்காளியை வாங்க 5 மணி நேரம் காத்திருந்த மக்கள்

Aug 06, 2023,10:19 AM IST
சென்னை : கிலோ ரூ.60 என்ற விலைக்கு கூட்டுறவு மையங்களில் விற்கப்படும் தக்காளியை வாங்குவதற்காக சென்னை மக்கள் 5 மணி நேரம் காத்திருந்து வாங்கி சென்று வருகின்றனர்.

தக்காளி விலை நாடு முழுவதும் தாறுமாறாக ஏறிக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 முதல் 180 வரை உயர்ந்தது.

தென்மாநிலங்கள் பரவாயில்லை என்னும் சொல்லும் அளவிற்கு வட மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 ஐயும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

தக்காளி விலை உயர்வின் காரணமாக தக்காளி ஏற்றி வரும் லாரியையே கடத்திய சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. இந்நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல வழிகளிலும் முயன்று வருகின்றன. சந்தைகள், கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் சாமானிய மக்களின் கஷ்டங்களை போக்குவதற்காக குறைந்த விலைக்கு அரசு கூட்டுறவு மையங்கள் மூலமும், ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்ய மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன.



சென்னையில் 5 இடங்களில் உள்ள கூட்டுறவு மையங்களில் ரூ.60 என்ற விலைக்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ராயப்பேட்டையில் உள்ள கூட்டுறவு மையத்தில் ரூ.60 க்கு தக்காளி வாங்குவதற்காக நூற்றுக்கும் அதிகமான மக்கள் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றுள்ளனர்.

இதற்கிடையில் சென்னையில் தற்போது தக்காளி விலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.160 க்கு விற்கப்பட்ட தற்காளி விலை தற்போது குறைந்து ரூ.100 என்ற அளவை எட்டி உள்ளது. இருந்தாலும் பல இடங்களில் அதிக விலைக்கே தக்காளி விற்கப்படுவதால் மக்கள் வேறு வழியின்றி கூட்டுறவு மையங்களில் ரூ.60 க்கு விற்கப்படும் தக்காளியை வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்