ஆஹா.. நாளைக்கு புரட்டாசி பிறக்குதே.. கறிக் கடைகளுக்குப் படையெடுத்த மக்கள்!

Sep 17, 2023,11:57 AM IST

சென்னை: புரட்டாசி மாதம் நாளை பிறப்பதால் இன்றைய ஞாயிற்றுக்கிழமையை இனிமையாக முடிக்க மக்கள் கறிக்கடைகள், மீன் கடைகளுக்கு படையெடுத்ததால் அங்கு கூட்டம் அலை மோதியது.


புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் அந்த ஒரு மாதமும் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால் இந்த ஒரு மாதமும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் சற்று குறைந்து காணப்படும். இந்த நிலையில் நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது, கூடவே விநாயகர் சதுர்த்தியும் வருகிறது.




இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டக்கடைசியாக ஒரு பிடி பிடித்துக் கொள்ளலாம் என்று மட்டன், சிக்கன், மீன் கடைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை அனைத்து இறைச்சிக் கடைகளில் நல்ல கூட்டம் காணப்பட்டது. காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலும் மீன் வரத்து வழக்கம் போல அதிகமாக இருந்தது. அதேபோல கூட்டமும் காணப்பட்டது. ஆனால் விலை பெரிதாக உயரவில்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் நிறைய வாங்கிச் சென்றனர்.


கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கூட மீன் விற்பனை இன்று அதிகமாக இருந்தது. சிக்கன் விற்பனையும் ஜோராக காணப்பட்டது. அதேசமயம், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாளை விநாயகர் சதுர்த்தி வருகிறது என்பதால் இன்றே வீடுகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இன்று அசைவம் சாப்பிடாமல் தவிர்த்ததையும்  காண முடிந்தது. இதனால் மதுரையில் இறைச்சிக் கடைகளில் பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையும் காணப்பட்டது.




புரட்டாசி மாதம் பிறந்தாலும் கூட அசைவம் சாப்பிடுவதை தொடரும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக சென்னையில் இப்போதெல்லாம் புரட்டாசி மாதத்திலும் கூட அசைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டனர் பலர். இதனால் வழக்கம் போலவே இறைச்சிக் கடைகளில் புரட்டாசி மாதத்திலும் கூட்டம் அலைமோதவே செய்யும். என்ன ஒன்று என்றால் வழக்கத்தை விட சற்றுக் குறைவான அளவே விற்பனை நடக்கும்.

படங்கள்: மீனாட்சி

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்