ஆஹா.. நாளைக்கு புரட்டாசி பிறக்குதே.. கறிக் கடைகளுக்குப் படையெடுத்த மக்கள்!

Sep 17, 2023,11:57 AM IST

சென்னை: புரட்டாசி மாதம் நாளை பிறப்பதால் இன்றைய ஞாயிற்றுக்கிழமையை இனிமையாக முடிக்க மக்கள் கறிக்கடைகள், மீன் கடைகளுக்கு படையெடுத்ததால் அங்கு கூட்டம் அலை மோதியது.


புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் அந்த ஒரு மாதமும் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால் இந்த ஒரு மாதமும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் சற்று குறைந்து காணப்படும். இந்த நிலையில் நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது, கூடவே விநாயகர் சதுர்த்தியும் வருகிறது.




இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டக்கடைசியாக ஒரு பிடி பிடித்துக் கொள்ளலாம் என்று மட்டன், சிக்கன், மீன் கடைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை அனைத்து இறைச்சிக் கடைகளில் நல்ல கூட்டம் காணப்பட்டது. காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலும் மீன் வரத்து வழக்கம் போல அதிகமாக இருந்தது. அதேபோல கூட்டமும் காணப்பட்டது. ஆனால் விலை பெரிதாக உயரவில்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் நிறைய வாங்கிச் சென்றனர்.


கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கூட மீன் விற்பனை இன்று அதிகமாக இருந்தது. சிக்கன் விற்பனையும் ஜோராக காணப்பட்டது. அதேசமயம், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாளை விநாயகர் சதுர்த்தி வருகிறது என்பதால் இன்றே வீடுகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இன்று அசைவம் சாப்பிடாமல் தவிர்த்ததையும்  காண முடிந்தது. இதனால் மதுரையில் இறைச்சிக் கடைகளில் பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையும் காணப்பட்டது.




புரட்டாசி மாதம் பிறந்தாலும் கூட அசைவம் சாப்பிடுவதை தொடரும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக சென்னையில் இப்போதெல்லாம் புரட்டாசி மாதத்திலும் கூட அசைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டனர் பலர். இதனால் வழக்கம் போலவே இறைச்சிக் கடைகளில் புரட்டாசி மாதத்திலும் கூட்டம் அலைமோதவே செய்யும். என்ன ஒன்று என்றால் வழக்கத்தை விட சற்றுக் குறைவான அளவே விற்பனை நடக்கும்.

படங்கள்: மீனாட்சி

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்