விலகியது இஸ்ரேல் ராணுவம்.. காஸாவுக்குத் திரும்பும் மக்கள்.. ஒன்னுமே மிச்சம் இல்லை.. எல்லாம் போச்சு!

Apr 08, 2024,10:14 AM IST

கான் யூனிஸ், தெற்கு காஸா:  காஸாவின் தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் விலகியதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அந்த ஊரில் எதுவுமே மிச்சம் இல்லை என்றும் எல்லாமே அழிந்து போய் விட்டதாகவும் மக்கள் கண்ணீருடன் கூறியுள்ளனரம்.


வீடுகள் எல்லாம் தரைமட்டமாகி விட்டது. மண்ணோடு மண்ணாகக் கிடக்கிறது. எங்களது வாழ்வாதாரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் வாசம்தான் வீசுகிறது. வெறும் குப்பை மேடு போல இருக்கிறது எங்களது ஊர். என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை என்று காஸா மக்கள் கண்ணீருடன் கூறினர்.


ராணுவத்தால் சிதிலமாக்கப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளில் பல பிணங்கள் கிடக்கின்றனவாம்., பல உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அதை சரி செய்யும் பணியில் மக்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.




கான் யூனிஸ் நகரம் காஸாவின் தென் பகுதியில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.. இஸ்ரேல் ராணுவத்துக்கும் - ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரில் யூனிஸ் நகரமும் சிக்கிக் கொண்டது. இங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்த மக்களுக்கு வெறும் மண் மேடும், கட்டடட இடிபாடுகளும்தான் மிச்சம் உள்ளன. பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து விட்டன.


இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளிகளின் சண்டையில் சிக்கி நகரமே சின்னாபின்னமாகியுள்ளது.  நகரின் அனைத்து முக்கியப் பகுதிகளும் சேதமடைந்துள்ளன. அல் சலாம் மருத்துவமனை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இஸ்ரேல் படையினரின் குண்டு வீச்சில் இந்த மருத்துவமனையும் கடும் சேதமடைந்துள்ளது. அந்தக் கட்டடத்தை  பயன்படுத்த முடியாத அளவுக்கு கடுமையாக சேதமடைந்து நிற்கிறது மருத்துவமனை.


கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காஸா மீதான இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் தொடங்கியது. ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சரமாரியாக சுட்டுக் கொன்றும், ஏவுகணை வீசித் தாக்கியும் கொன்றதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தனது கோரத் தாக்குதலைத் தொடங்கியது நினைவிருக்கலாம். காஸாவை நிர்மூலமாக்கி விட்டு இப்போது இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது.


இஸ்ரேல் ராணுவத்தின் பதில் தாக்குதலில் கிட்டத்தட்ட 33,175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்