அம்ரோஹா, உத்தரப் பிரதேசம்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் சொந்த கிராமத்தில் மக்கள் கண்டு களித்து டீம் இந்தியாவை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்காக மிகப் பிரமாதமாக ஜொலித்த நாயகர்களில் முக்கியமானவராக உருவெடுத்துள்ளார் ஷமி. ஆரம்பத்தில் சில போட்டிகளில் அவருக்கு ஆடும் வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால் பிறகு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சூப்பராக பயன்படுத்தி அதிரிபுதிரியான பந்து வீச்சைக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் ஷமி.
குறிப்பாக அரை இறுதிப் போட்டியில் அவரது பந்து வீச்சு அனைவரையும் மிரள வைத்து விட்டது. ஷமியின் இந்த எழுச்சிதான் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் மிக முக்கியமான அம்சமாகியுள்ளது. இந்த நிலையில் அவரது சொந்த கிராமம், உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ளது. அங்கு பெரிய ஸ்கிரீன் கட்டி அதில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பி வருகின்றனர். அதில் கிராம மக்கள் கூடி போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.
சிறார்களும், இளைஞர்களும் மரத்தின் மீதும் ஏறி அமர்ந்து போட்டியைப் பார்த்து ரசித்து வருகின்றனர். அவர்களது ஹீரோ இன்னும் வரவில்லை. அவரது பந்து வீச்சுக்காக மொத்த கிராமமும் ஆவலுடன் காத்திருக்கிறது. தற்போது இந்தியாவின் பேட்டிங்கை அவர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
{{comments.comment}}