தேவர் ஜெயந்தி: மு.க.ஸ்டாலின் தலைவர்கள் அஞ்சலி.. பசும்பொன் நினைவிடம், மதுரையில் கோலாகலம்!

Oct 30, 2023,11:29 AM IST

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.


முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அவர் பிறந்த ராமநாதபுரம்  கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. அவரது பிறந்த தினமும், நினைவு தினமும் ஒரே நாளில் வருகிறது. முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குருபூஜை விழா என 3 நாட்கள் இவ்விழா இந்தாண்டு நடைபெற்றது.


கடந்த 28ம்தேதி  ஆன்மிக விழாவாகவும், 29ம் தேதி அரசியல் விழாவாகவும், 30ம் தேதியான இன்று அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.  பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார்.  அரசு விருந்தினர் மளிகையில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 7.40 மணியளவில் கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.




அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, கீதாஜீவன, திமுக எம்.எல்.ஏக்கள்,  நிர்வாகிகள்,மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர்  மதுரையில் உயர்மட்ட 2 மேம்பால பணிகளை தொடங்கி வைத்தார். 


அதைத் தொடர்ந்து  தமிழக முதல்வர் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு சென்று அரசு சார்பில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு மரியாதை செலுத்துகின்றனர்.


பலத்த பாதுகாப்பு




தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவிற்கு பல்வேறு முக்கிய தலைவர்கள் படையெடுத்து வர உள்ளதால்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டு  உள்ளனர். 


கமுதி முதல் பசும்பொன் வரை சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் பசும்பொன்னில் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.


சென்னையிலும் கோலாகலம்


இதேபோல சென்னையிலும் தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும், பொதுமக்களும் மாலை அணிவித்தும், பால் குடம் எடுத்து வந்தும் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்