கோலாகலமாக தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக்ஸ்.. கம்பீரமாக அணிவகுத்து வந்த இந்திய அணி!

Jul 27, 2024,07:57 AM IST

பாரீஸ்:  பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகலாமான தொடக்க விழாவுடன் தொடங்கியுள்ளன. இதில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக் கொடி ஏந்தி வந்தார்கள் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்துவும், டேபிள் டென்னிஸ் வீராங்கனையான சரத்  கமலும்.


இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு விழா தொடங்கி கோலாகலமாக முடிவடைந்தது. கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், வீராங்கனைகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அணி வகுத்து வந்தனர். பிரெஞ்சு தலைநகரான பாரீஸின் சீயன் ஆற்றுப் பகுதியில் நடந்த இந்த விழா பார்க்கவே படு ஜோராக இருந்தது.  தொடக்க விழா நடந்தபோது கன மழை பெய்தபோதும் கூட விழாவைக் காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை அது பாதிக்கவில்லை.




தொடக்க விழாவில் இந்திய அணியினர் மிடுக்காக பாரம்பரிய உடை அணிந்து கம்பீரமாக நடை போட்டு வந்தனர். சரத் கமலும், பி.வி. சிந்துவும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினர். 


வழக்கமாக போட்டி நடைபெறும் மெயின் ஸ்டேடியத்தில்தான் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நடைபெறும். ஆனால் இந்த முறை முதல் முறையாக வெளியில் விழா நடத்தப்பட்டுள்ளது. தொடக்க விழாவை சியன் ஆற்றின் கரையோரமாக ஆயிரக்கணக்கானர் கூடியிருந்து கண்டு களித்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் விழாவை நேரில் கண்டு களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அக்கம் பக்கத்து வீடுகள், மொட்டை மாடிகளிலும் மக்கள் கூடியிருந்தனர். அது 2 லட்சம் பேர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிக மிக வித்தியாசமான முறையிலும், பிரமாண்டமாகவும் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.


ஒலிம்பிக்கில் இந்திய அணி




பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 117 பேர் கொண்ட வலுவான அணி கலந்து கொள்கிறது. இதில் தொடக்க விழாவில் 78 பேர் கலந்து கொண்டனர்.


இந்தியா கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கம் பெற்றிருந்தது. இந்த முறை அதை விட கூடுதலாக வாங்கும் என்ற நம்பிக்கையில் இந்திய அணியும், மக்களும் உள்ளனர். இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமாக 35 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதில் தங்கம் 10, வெள்ளி 9 மற்றும் வெண்கலம் 16 ஆகும்.


ஒரு ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்ச பதக்கங்களை வென்றது என்றால் அது 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிதான். அதில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியிருந்தது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை அள்ளும் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்துள்ளனர்.


Best of luck Team India!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்