பாரிஸ்: 17 ஆவது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களை கைப்பற்றி 13 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி செப்டம்பர் 8 வரை நடைபெற்று வருகிறது. 167 உலக நாடுகளில் இருந்து மொத்தம் 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து 84 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த தங்க மகன் மாரியப்பன், சிவராஜ் சோலைமலை, மனிஷா ராமதாஸ், துளசிமதி, நித்யஸ்ரீ, கஸ்தூரி ராஜாமணி, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் வெண்கல பதக்கத்தையும், இந்திய வீரர் சரத்குமார் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
அதேபோல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஜீவன் ஜி வெண்கல பதக்கம் வென்றார்.இது தவிர ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அஜித் சிங் வெள்ளி பதக்கத்தையும்,சுந்தர் குர்ஜார் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆண்கள் கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். அதேபோல் மேலும் ஒரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியாவுக்கு இதுவரை ஐந்து தங்கப்பதக்கம், ஒன்பது வெள்ளி, பத்து வெண்கலம் என மொத்தம் 24 நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 2024 பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்று 13 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பதக்க பட்டியலில் சீனா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாம் இடத்திலும் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}