தமிழ்நாட்டில் மட்டும் டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவதா.. வேல்முருகன் கண்டனம்

Sep 01, 2023,03:17 PM IST
சென்னை:   தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் மட்டும் வருடா வருடம் மத்திய அரசு கட்டணத்தை உயர்த்தி வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்க சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது .

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி ,1992 ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக சுங்ககட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. 

ஏப்ரல் மாதம் 29 சுங்கச் சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள 26 சுங்க சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம்  உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 26 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் நடந்த கட்டண வசூலில் ரூபாய் 132 கோடி முறை கேட்டை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது .இதில் தமிழ்நாட்டில் இருக்கும் பரனூர் சுங்கச்சாவடியும் ஒன்று .இந்த ஒரே ஒரு சுங்கச்சாவடியில் மட்டும் 6.5 கோடி ரூபாய் முறைகேடாக வசூலிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 26 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .தமிழ்நாடு, கர்நாடகா ,ஆந்திரா தெலுங்கானா, கேரளா ஆகிய தென் மாவட்டங்களில் சுங்க கட்டண வசூல் சிஏஜி ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 2017 -2018 நிதியாண்டு முதல் 2020- 2021 நிதியாண்டு வரை ரூபாய் 28, 523 . 88 கோடி வசூலாகி உள்ளது .நாடு முழுவதுமான வரி வசூல் இது சுமார் 28 விழுக்காடு ஆகும். இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ஆண்டுக்கு ரூபாய் 2400 கோடி வசூலாகி உள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இதற்கு அடுத்ததாக ஆந்திராவில் ரூபாய் 1,950 கோடி கர்நாடகாவில் ரூபாய் 1,830 கோடி சுங்க கட்டணம் வசூலாகி உள்ளது.

இப்படி தென் மாவட்டங்களிலேயே அதிகமாக வசூல் அள்ளித்தரும் தமிழ்நாட்டை குறிவைத்து சுங்க கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி வருவது ஏற்றுக்கொள்ள முடியாது. பெட்ரோல் ,டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் மத்திய அரசு சுங்க கட்டணத்தை மேலும், மேலும் ஏற்றுவதன் மூலம்  ஏழை, எளிய ,நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வு வேலையில்லா வேலையின்மையால் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் துயரங்களை சந்தித்து வரும் நிலையில் இந்த சுங்க கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வணிகர்கள் ,வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன. மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளையும் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளையும் , நகர்ப்புறத்தில் இருக்கும் சுங்கச் சாவடிகளையும், 60 கிலோமீட்டர் குறைவாக இருக்கும் சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தி பேசியிருந்தேன். பிற சட்டமன்ற உறுப்பினர்களும் பேசியிருந்தனர். இதன் அடிப்படையில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு மாண்புமிகு நெடுஞ்சாலை துறை அமைச்சர்  எ .வ.வேலு அவர்கள் கடிதம் வாயிலாகவும், நேரடியாகவும் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி இருந்தார். ஆனால் அக்கோரிக்கையின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு சுங்கச்சாவடி உரிமையாளர்களோடு கைகோர்த்து கொண்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் , தமிழ்நாட்டில் காலாவதியாக உள்ள 32 சுங்க சாவடிகளையும் ,60 கிலோ மீட்டர் தூரத்துக்கு குறைவாக இருக்கும் சுங்கச்சாவடிகளையும் , நகர்ப்புறத்தில்  இயங்கும் சுங்கச்சாவடிகளையும், மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொள்கிறது .

இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு சுங்கச்சாவடி கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்