ஹைதராபாத்: இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் உலகக் கோப்பை வீரர் முஷ்டாக் அகமது ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
50 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அந்த நாட்டு மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் 6ம் தேதி விளையாடவுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் அது நெதர்லாந்து அணியைச் சந்திக்கிறது. இதைத் தொடர்ந்து 10ம் தேதி இலங்கையுடன் மோதும்.
அக்டோபர் 14ம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த மைதானத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு முன்னாள் ஜாம்பவான் முஷ்டாக் அகமது சில அறிவுரைகளைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவைப் பொருத்தவரை 12 வீரர்களுடன் அந்த அணி விளையாடும். இந்திய அணிக்காக குரல் கொடுத்து எப்போதும் முழக்கிட்டபடி இருக்கும் ரசிகர்கள்தான் அந்த 12வது வீரர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குரல் கொடுப்பார்கள். எனவே விளையாடும்போது ரசிகர்களின் ஆரவாரம் ஜாஸ்தியாகவே இருக்கும். அதைக் கண்டு பாகிஸ்தான் வீரர்கள் பதட்டமாகி விடக் கூடாது. இதை எதிர்பார்த்தே விளையாடச் செல்ல வேண்டும். பல வீரர்கள் இந்தியாவில் முதல் முறையாக விளையாடுகிறார்கள். அவர்கள் தங்களது ஃபோகஸை இழந்து விடாமல் நிதானமாக ஆட வேண்டும்.
பாகிஸ்தான் அணியால் எந்த சூழலையும் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன். எனவே சிறந்த வெற்றியை அந்த அணியைப் பெறும் என்றும் நம்புகிறேன் என்றார் முஷ்டாக் அகமது.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்