நாடே மோசமா இருக்கு.. எனக்கு அதெல்லாம் வேண்டாம்.. என்ன இப்படி சொல்லிட்டாரு பாகிஸ்தான் அதிபர்!

Mar 13, 2024,05:38 PM IST

இஸ்லாமாபாத்: நாட்டில் சிக்கலான பொருளாதாரம் நிலவுவதால் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது பதவிக்காலம் முடியும் வரை தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறி விட்டார்.


பாகிஸ்தானில்  கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீஃப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.


பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி அதிபராக தேர்ந்தெடுப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து ஆசிப் அலி சர்தாரியை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தாவின் 14வது அதிபராக மார்ச் 10ம் தேதி ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்றார். 




பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தனது பதவிக் காலம் முடியும் வரை தனக்கு சம்பளம் வேண்டாம் என்று அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கருவூலத்தில் மேலும் சுமையை ஏற்றுவதை தவிர்க்கும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ பதிவை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


இவர் ஏற்கனவே அதிபராக இருந்தவர் மட்டும் அல்ல. மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்