இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய தந்தையின் செயல் கலகலப்பையும் அதேசமயம், பெண்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்ற கவலையுயம் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த ஹில் என்ற இளம் பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் தலையில் சிசிடிவி கேமரா பொருத்தி கொண்டு வலம் வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்த பத்திரிகை நிருபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அந்தப் பெண் பாதுகாப்பு கருதியும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் தனது தந்தை தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியதாக பதில் அளித்துள்ளார். அதேபோல் தந்தையின் இந்த செயலால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இன்றி காணப்படுகிறது. இதனால் பல்வேறு பாலியல் பலாத்கார குற்றங்களும் கொலைகளும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கராச்சியில் நடந்த பாலியல் தாக்குதலில் இளம்பெண் ஒருவர் பலியானார். இதனால் பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் பெற்றோர்கள் பெண்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில்தான் இந்த தந்தை தனது மகளின் பாதுகாப்புக் கருதி மகள் தலையிலேயே சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இது பலரையும் சிரிக்க வைத்துள்ளது. அதேசமயம், கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியே சென்ற மகளை 24 மணி நேரமும் கண்காணிக்க இதுபோன்ற சிசிடிவி கேமராக்களை தலையில் பொருத்தியதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த தந்தையை விமர்சிப்பது சரியாக இருக்காது. அதற்குப் பதில், பெண்களுக்கு இந்த நிலை ஏற்படக் காரணமானவர்கள்தான் உண்மையில் வெட்கப்பட வேண்டியவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}