இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதள உலகில் முன்னணியில் இருப்பது எக்ஸ் தளமாகும். ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட இந்த சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கி தற்போது எக்ஸ் என்று மாற்றி நடத்தி வருகிறார். இதற்கு தற்போது பாகிஸ்தானில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு வகுத்துள்ள விதிகளை பின்பற்றத் தவறியதாகக் கூறி, எக்ஸ் தளம் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாம்.
இதுதொர்பாக எக்ஸ் தளம் சார்பில் பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், தடை குறித்த தகவலை கோர்ட்டில் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. விசாரணையின் போது, பாகிஸ்தான் அரசின் சட்டபூர்வ உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைபிடிக்க தவறியது. எக்ஸ் தளத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டும், அதனை நிறுவனம் சரி செய்யவில்லை. எனவேதான் தடை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.
தேசிய பாதுகாப்பைப் பேணுதல், பொது ஓழுங்கைப் பேணுதல் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக பாகிஸ்தானில் ட்விட்டர் எக்ஸ் தடைசெய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}