CPI (M).. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு

Jan 05, 2025,06:40 PM IST

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த கட்சியின் 24வது மாநில மாநாட்டின்போது பெ. சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தது.  3வது நாளான இன்று முக்கிய நிகழ்வாக புதிய மாநிலச் செயலாளர் தேர்வு நடைபெற்றது. கட்சியின் 80 உறுப்பினர்கள் அடங்கிய மாநிலக் குழுக் கூட்டத்தில் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தற்போது கே.பாலகிருஷ்ணன் 2வது முறையாக மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு தரப்பட மாட்டாது என்று கூறப்பட்டது. 3 முறை ஒருவர் மாநிலச் செயலாளராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று புதிய செயலாளராக பெ.சண்முகம் தேர்வாகியுள்ளார்.




திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் பெ.சண்முகம்.  மாணவர் சங்கத்தில் ஆரம்பத்தில் செயல்பட்டு வந்தவர் சண்முகம். பின்னர் படிப்படியாக பல்வேறு நிலைகளில் உயர்ந்து வந்த அவர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ளார். 


மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் சண்முகம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் விவசாய பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர். வாச்சாத்தி போலீஸ் அத்துமீறல் வழக்கை நீண்ட காலம் விடாமல் நடத்தி வந்தவர் பெ. சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது. மலை வாழ் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு தளங்களில் போராடி வருபவர். 


விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பொலிட்பீரோ ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், பொலிட்பீரோ உறுப்பினர்கள் பிருந்தா காரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில மாநாட்டில் பல்வேறு முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

news

மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

அதிகம் பார்க்கும் செய்திகள்