உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்.. தவிப்பில் தமிழர்கள்.. உதவி எண்கள் அறிவிப்பு

Oct 09, 2023,02:06 PM IST

- சகாயதேவி


சென்னை: ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தமிழர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


ஹமாஸ் அமைப்பின் திடீர் தாக்குதலால் நிலை குலைந்த இஸ்ரேல் தற்போது பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் மற்றும் விமானப்படை ஒருங்கிணைந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா முனையை சின்னாபின்னமாக்கி வருகிறது. அவர்களின் வெறித்தனமான தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.




இந்த நிலையில் இஸ்ரேலில்  வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. அதேசமயம், அங்கிருந்து பலர் கிளம்பி தாயகம் வரும் தகவல்களும் வெளியாகியுள்ளன.இந்தப் பின்னணியில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மாநில அரசு உதவக் களம் இறங்கியுள்ளது.


தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு  உதவி எண்களையும் அரசு அறிவித்துள்ளது. இந்த உதவி எண்களைப் பயன்படுத்தி தேவையான உதவிகளைப் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


அரசு அறிவித்துள்ள உதவி எண்கள்:


0-87602-48625

0-99402-56444

0-96000-23645



இமெயில் முகவரி: 


nrtchennai@tn.gov.in 

nrtchennai@gmail.com


இஸ்ரேலிலிருந்து மீட்க 30 தமிழர்கள் கோரிக்கை


இதற்கிடையே ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் 30 தமிழர்கள் தங்களை மீட்குமாறு கோரி அயலக தமிழர் நல வாரியத்தை அணுகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


இவர்கள் அனைவரும் என்ஜீனியர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள். அயலக தமிழர் நல வாரியத்துடன் இவர்கள் தொடர்பு கொண்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரவித்துள்ளனர். இருப்பினும் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் இஸ்ரேலை விட்டு கிளம்ப அவர்கள் நினைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து இவர்களை பத்திரமாக மீட்க மத்திய வெளியுறவுத்துறை மூலம் இந்தியத் தூதரகத்தை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்