சென்னை: சென்னை டூ திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை டூ திருநெல்வேலி இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுவரை நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் ஓடி வருகின்றன. இந்நிலையில் சென்னை டூ திருநெல்வேலி உட்பட 11 மாநிலங்களுக்கு இடையே நேற்று 9 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் 2 புதிய ரயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை காணொளி வாயிலாக தொடங்கி வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை எழும்பூர் -திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கிறது. இது தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி உள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
எனவே வந்தே பாரத் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார் ஓ.பி.எஸ்.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}