சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக குழு இன்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்துப் பேசியது. அந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது புகார் மனு ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் வழங்கினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் நிதியுதவி அளித்துள்ளார். இந்தப் பணத்தில்தான் தேர்தலை திமுக சந்திப்பதாக சொல்கிறார்கள்.
தமிழ்நாடு காவல்துறை இந்த விஷயத்தில் சரிவர செயல்படவில்லை. போதைப் பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. பள்ளிப் பிள்ளைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களை தடுக்க தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படியே போனால் அடுத்த 7 வருடங்களில் தமிழ்நாடு போதைப் பொருட்களின் மையமாக மாறியிருக்கும். இதுகுறித்து ஆளுநரிடம் விளக்கி மனுவாக அளித்துள்ளோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆளுநரிடம் அளித்த மனுவில், எங்கெல்லாம் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்த விவரம் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}