சென்னை: சென்னையிலிருந்து நெல்லை செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், ஒரு வழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இன்று இரவு இயக்கவுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வரையிலான இந்த ஒரு வழி சிறப்பு ரயிலானது, நெல்லைக்கு மட்டும் இயக்கப்படும். நெல்லையிலிருந்து சென்னைக்கு மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில் கிடையாது.
06083 என்ற எண்ணுடைய இந்த சிறப்பு ரயிலானது, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து 19ம் தேதி அதாவது இன்று இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு மறு நாள் முற்பகல் 11.20 மணிக்கு நெல்லையை சென்றடையும். மொத்தம் 16 தூங்கும் வசதி மற்றும் 2 செகன்ட் கிளாஸ் லக்கேஜ் வசதியுடன் கூடிய ரயிலாக இது இயக்கப்படும்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று நெல்லையை வந்தடையும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}