தென்காசி: பழைய குற்றால அருவியில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்தது. வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாத நிலைக்கு மக்கள் வந்தனர். பல மாவட்டங்களில் வெயில் செஞ்சுரி அடித்தது மட்டும் அல்லாமல், அனல் காற்றும் வீசி மக்களை ஒரு வழிபடுத்தி விட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பித்தது. இதனால் மக்கள் என்ன செய்வது என்றே தெரியாத நிலைக்கு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து மக்களை மகிழ்வித்தது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனால், கோடை காலத்திலும் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குற்றாலத்தில் குவிந்தனர். தற்போது மேற்குதொடர்ச்சி மலைபகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால மெயின் அருவி மற்றும் 5 அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த அருவியில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
காட்டாற்று வெள்ளத்தில், அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்டார். அந்த சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்படனர். இதில் அருவியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அஸ்வினின் உயிரிழந்த உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வந்துள்ளார். குற்றாலம் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}