"முதல்ல  1 ரூபாய் போடுவோம்".. மகளிர் உரிமைத் தொகை திட்ட ஏற்பாடுகள் தடபுடல்!

Sep 13, 2023,02:37 PM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் முதல் கட்டமாக அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கும் ரூ.  1 அனுப்பி சோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

மேலும் யாரெல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனரோ அவர்களுக்கெல்லாம் உங்களைத் தேர்வு செய்துள்ளோம் என்ற எஸ்எம்எஸ்ஸும் அனுப்பப்படுகிறது. அதேபோல நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் கூட அதற்கான காரணத்தை விளக்கி குறுஞ்செய்தியை அதிகாரிகள் அனுப்புகிறார்களாம்.



திமுக அரசின் மிகப் பெரிய திட்டம் எது என்றால் அது இதுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வர்ணித்துள்ள திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படவுள்ளது. மிகப் பெரிய திட்டமாக பார்க்கப்படும் இதில் எந்தவிதமான தவறும் நடந்து விடக் கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக மிக கவனமாக இருக்கிறார்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இதுவரை 1,06,50,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வங்கிக் கணக்குகளில் தற்போது ரூ. 1 வரவு வைக்கப்பட்டு வருகிறதாம். அதாவது போடும் பணம் சரியாக போகிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஆளுக்கு ஒரு ரூபாய் கணக்கில் போடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதுவும் பரிசோதிக்கப்படுகிறது.

திமுக அரசின் மாபெரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்