வேலூர்: இனி வேலூரில் இருந்து மைசூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவ்வப்போது பல்வேறு வசதிகள், புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகளையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை பயணிகள் நலனுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. அது என்னவென்றால், தற்போது வேலூரில் இருந்து மைசூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்கள் இனி மைசூருக்கு செல்வது எளிமையாகியுள்ளது.
அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வேலூரில் இருந்து மைசூருக்கு குளிரூட்டப்பட்ட படுக்கை மற்றும் இருக்கை வசதி உள்ள பேருந்து ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான டிக்கெட் முன்பதிவுக்கு www.tnstc.in என்ற இணையதளத்திலோ அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலோ அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}