சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தளபதி விஜய் அவர்களின் தலைமையில் நான் இணைகிறேன். இனி என் கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி அவர்களின் வழியில் இருக்கும் என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. அதாவது புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதியை தருவோம் என்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் பாஜகவில் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளராக பணிபுரிந்து வந்த, நடிகை ரஞ்சனா நாச்சியார் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதில் எனக்கென்று ஒரு இயக்கம் எனக்கென்று ஒரு கழகம் பெண்ணின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை இனி எதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி பயணிக்க துவங்கி விட்டேன். இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புதிய பயணம் அது எழுச்சிப் பயணம் வருங்காலங்களில் இனி அது வெற்றிப் பயணம்.. என கூறியிருந்தார். அப்போதே கணித்து விட்டனர் நம் நெட்டிசன்கள்.வெற்றிப் பயணம் என ரஞ்சனா நாச்சியார் குறிப்பிட்டது ஒருவேளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய விரும்புகிறாரோ என தகவல் வெளியானது.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழக வெற்றி கழகத்தில் தளபதி விஜய் அவர்களின் தலைமையில் நான் இணைகிறேன். இனி என் கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி அவர்களின் வழியில் இருக்கும் என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மொழிக்கு எதிரி கிடையாது. ஆனால் இந்தி தான் கத்துக்க வேண்டும் என்ற நிலைமையில் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்போது தமிழகத்தில் குழந்தைகளுக்கு அது அவசியம் இல்லாத ஒன்று. மொழி என்பதை கற்றுக் கொள்ளலாம். இரண்டு வாரங்களில் படித்தால் ஒரு மொழியை கற்றுக் கொள்ளலாம். ஒரு பாடமாக கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. கிரெடிட் கார்டு வேணாம் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் அதை வாங்கிக் கொள்ளுங்கள் இலவசமாக கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுவது திணிப்பது தானே. அதைத்தான் நான் கூறுகிறேன்.
இனி தளபதி அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் தான் தமிழ்நாட்டின் வெற்றி களமாக மாறப்போகிறது. அதை தமிழ்நாட்டு மக்கள் பொறுத்திருந்து பார்ப்பார்கள். எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது. ஏற்கனவே ஒன்றரை கோடி தொண்டர்கள் இதில் இருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இதற்கு மேல் இன்னும் சிறப்பாக தான் இருக்கும். களம் இனிமேல் தான் சூடு பிடிக்கப் போகிறது. அடுத்த பத்து மாத காலங்களில் தேர்தலை நோக்கி செல்ல இருக்கின்றது. விறுவிறுப்பாக இருக்கப் போகிறது. எதிர்பார்க்கலாம்.
தளபதி விஜயின் கட்சியில் தேசியமும் திராவிடமும் எனக்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்பி தான் இணைகிறேன். பெண்கள் பாதுகாப்பிற்காக தளபதி அவர்கள் எந்த எல்லை வரைக்கும் சென்று உறுதுணையாக இருப்பார். அதில் பெண்களுக்கு ஒரு குரலாக நானும் ஈடு கொடுக்க வேண்டும் என்று நான் இணைந்து இருக்கிறேன் என பேசியுள்ளார்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}