ஊரெல்லாம் ரவுடித்தனம்.. "கெத்து" வீடியோக்கள்.. திருச்சி கொம்பன் ஜெகன் சுட்டுக் கொலை!

Nov 22, 2023,05:10 PM IST

- மஞ்சுளா தேவி


திருச்சி: திருச்சியைச் சேர்ந்தவரான பிரபல ரவுடி "கொம்பன்" ஜெகன் என்பவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ரவுடி கொம்பன் ஜெகன்.  இவரை யாரும் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கிடையாதாம், கொம்பன் என்றுதான் சொல்வார்களாம். காரணம் இவரை யாராலும் அடக்க முடியாதாம், பிடிக்க முடியாதாம். ஜெகனுக்கு வயது 30தான் ஆகிறரது. கொலை செய்தல், கூலிப்படையாக செயல்படுதல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. லால்குடி காவல் நிலையத்திலும் இவர் மீது பல வழக்குகள் உள்ளதாக கூப்படுகிறது.


பலமுறை சிறை சென்று திரும்பிய சிறைப் பறவையும் கூட.  ஜாதியைச்  சொல்லியும், தனது பெருமைகளைச் சொல்லியும் மிரட்டலான வீடியோக்களையும் போட்டு வந்தார். கடந்த 19ஆம் தேதி கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஒன்பது பேர் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து 9 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகன் தலைமறைவாகி விட்டார். 




ரவுடி கொம்பன் ஜெகனை தேடி பிடிப்பதற்காக போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் . இந்த நிலையில் சனமங்கலம் அருகே ரவுடி ஜெகன் இருப்பதாக தகவல் அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது சனமங்கலம் அருகே ரவுடி கொம்பன் ஜெகன் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கி தப்ப முயன்றுள்ளார்.  அவரை பிடிப்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .அப்போது ஜெகன் குண்டடி பட்டு உயிரிழந்தார்.


சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கொம்பன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், உதவி ஆய்வாளரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.




காயமடைந்த போலீசாருக்கு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி  விஷ்வா தப்பிக்க முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்