காலாண்டு விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Sep 27, 2024,12:25 PM IST

சென்னை:   காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வுகள் நடந்து இன்றுடன் முடிய உள்ளன. அதன் பின்னர் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இருப்பினும் பள்ளிகளின் விடுமுறை நாட்களை  நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை கடிதம் அளித்திருந்தன.




அந்த கடிதத்தில், காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என மூன்று நாட்கள் விடுமுறையில் அடங்கி விடுகிறது. மீதமுள்ள  இரண்டு நாட்கள் மட்டும் தான் காலாண்டு தேர்வு விடுமுறையாக கணக்கில் வருகிறது. இதனால் விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டது.


 அதனை ஏற்று அக்டோபர் 6ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை நாட்களை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 07ம் தேதி தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2024-2025ம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது. அக்டோபர் 7ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்