காசு, டீ எதுவும் தர மாட்டேன்...பிடிச்சா ஓட்டு போடுங்க...ஓப்பனாக பேசி ஓட்டு கேட்ட கட்காரி

Oct 01, 2023,10:10 AM IST
மும்பை : வரும் லோக்சபா தேர்தலில் தான் யாருக்கும் பணமோ, வேறு எந்த பொருளும் தரப் போவதில்லை என்றும், நான் மக்களுக்காக சேவை ஆற்றி உள்ளேன். அவர்கள் விரும்பினால் ஓட்டு போடட்டும் என ஓப்பனாக சொல்லி இப்போதே தனது தேர்தல் பிரசாரத்தை ஜோராக துவக்கி விட்டார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்காரி, மகாராஷ்டிராவின் வாஸிம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மிகவும் யதார்த்தமாகவும், ஓப்பனாகவும் மக்களிடம் பேசிய வார்த்தை தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய கட்காரி, அடுத்த லோக்சபா தேர்தலில் பேனரோ, போஸ்வரோ எதையும் நான் ஓட்டக் கூடாது என முடிவு செய்து விட்டேன். யாருக்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவோ, பிரச்சாரத்தின் போது டீ வாங்கிக் கொடுக்கவோ போவது இல்லை.  மகாலட்சுமியை கண்ணில் காட்ட போவதில்லை. வெளிநாட்டு சரக்கு வாங்கி கொடுக்க போவதில்லை. நான் இதுவரை எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. உங்களுக்காக சேவை செய்துள்ளேன்.




எனக்காக நான் எந்த விளம்பரமும் செய்து கொள்ள போவதில்லை. என்னை பற்றியும், எனது பணிகள் பற்றியும், நான் என்ன செய்கிறேன் என்பது பற்றியம் உங்களுக்கு தெரியும். உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் எனக்கு ஓட்டு போடுங்கள். அப்படி விருப்பம் இல்லையா? எனக்கு ஓட்டு போட வேண்டாம் என தெரிவித்துள்ளார் கட்காரி. 

நிதின் கட்காரி, மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி., ஆகி, மத்திய அமைச்சர் ஆனவர். இந்த முறையும் அவர் நாக்பூர் தொகுதியிலேயே போட்டியிடலாம் என எதிர்பார்க்ப்படுகிறது. 

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் பற்றி இதுவரை எதிர்கட்சிகள் தான் தீவிரமாக பேசி, கூட்டணி, தொகுதி பங்கீடு, வியூகம் என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தலைமை அது பற்றி பெரிதாக அளட்டிக்கொள்ளாமல் இருந்து வருகிறது. அதுவும் மத்திய அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் யாரும் தேர்தல் பற்றி இதுவரை பேசாமல் இருந்த நிலையில் தற்போது முதல் ஆளாக தேர்தல் பற்றி பேசி, தனக்காக அசத்தலாக ஓட்டுக் கேட்டு பிரச்சாரத்தையும் துவக்கி வைத்துள்ளார் கட்காரி. இது மக்கள் மத்தியில் பெரியதாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்