காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க மாட்டோம்.. இஸ்ரேல் பிடிவாதம்

Oct 12, 2023,05:09 PM IST

ஜெருசலேம்: காஸா பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் அனுமதிக்க மாட்டோம். மனிதாபிமான உதவிகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் மின்சாரத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளது பாலஸ்தீன மக்கள் குறித்த கவலையை அதிகரிப்பதாக உள்ளது.


இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் சிக்கி காஸா பகுதி சின்னாபின்னமாகியுள்ளது. அந்த நகரின் அடிப்படைக் கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைத்து வருகிறது இஸ்ரேல். அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பல லட்சம் பேர் இடம் பெயரந்து சென்று விட்டனர். ஹமாஸ் போராளிகளை வேட்டையாடுவதாக கூறி காஸாவையே நிர்மூலமாக்கி வருகிரது இஸ்ரேல்.




இஸ்ரேல் படையினர் காஸா முனைப் பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை துண்டித்துள்ளனர். காஸா நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களுக்கு மனிதாபிமா உதவிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இதை இஸ்ரேல் அமைச்சர் கட்ஸ் நிராகரித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில்,  காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளா..? நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை முதலில் அவர்கள் விடுவிக்க வேண்டும். அதுவரை தண்ணீர் கிடையாது, கரண்ட் கிடையாது, எரிபொருள் கிடையாது.. எதுவுமே கிடையாது என்றார் அவர்.


இஸ்ரேல் மீது அதிரடியான ராக்கெட் வீச்சை மேற்கொண்ட சமயத்தில், ஹமாஸ் போராளிகள் நூற்றுக்கணக்கில் இஸ்ரேலுக்குள் புகுந்து 150க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்று விட்டனர். இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் அவர்களைக் கொல்வோம் என்றும் ஹமாஸ் மிரட்டியுள்ளது .


இந்த நிலையில்தான் தற்போது காஸாவை குண்டு வீசி அழித்து வரும் இஸ்ரேல் படையினர் அடுத்து தரை மார்க்கமாக உள்ளே புகுந்து ஹமாஸ் போராளிகளை வேட்டையாடத் திட்டமிட்டுள்ளனர்.


இஸ்ரேலின் இந்த இரும்புப் பிடி நடவடிக்கையால் காஸாவில் மேலும் பல ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்