டெல்லி: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே நீடிக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறுகையில், நடப்பு நிதி ஆண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீகிதமாக இருக்கும். வரும் நிதி ஆண்டில் 5.4 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஆண்டு மே மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான கால கட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.50 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
ரெப்போ வட்டி விகிதத்தில் ஆறாவது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யவில்லை. தற்போதும் அதே நிலையே தொடர்கிறது. 2024 உலகப் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும். உலகளாவிய வர்த்தகம் பலவீனமாக இருந்தாலும் அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. 2024ல் அது வேகமாக வளர வாய்ப்புள்ளது. தற்போது பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உலகளாவிய பொது கடன் 100% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய முதலீடுகளுக்கான நிதி இடத்தை உருவாக்க கடன் சுமைகளை குறைப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}