Bihar Politics: 4 முறை கூட்டணியை மாற்றி.. 9வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் நிதீஷ் குமார்!

Jan 28, 2024,06:08 PM IST

பாட்னா: பீகார் மாநில ஆளுநரை இன்று முற்பகல் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த நிதீஷ் குமார் இன்று மாலை மீண்டும் அதே ஆளுநரால் முதல்வராகப் பதவிப் பிரமானம் செய்து வைக்கப்பட்டார்.


இன்று முற்பகல் வரை ராஷ்டிரிய ஜனதாதளத்தின் ஆதரவுடன் முதல்வராக இருந்து வந்த நிதீஷ் குமார், மாலையிலிருந்து பாஜக ஆதரவு முதல்வராக புது அவதாரம் பூண்டுள்ளார். மாலையில் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவிப்பிரமான விழாவில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவருடன் 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் கலந்து கொண்டார்.




கடந்த 23 ஆண்டு கால முதல்வர் வரலாற்றில் 4 முறை கூட்டணி மாறியுள்ளார் நிதீஷ் குமார். இப்போது 9வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பீகாரில் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றம் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. இந்தநிலையில் இந்தக் கூட்டணியை முறிக்க நிதீஷ்குமார் முடிவெடுத்தார். இந்தக் கூட்டணியை கைகழுவி விட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அவர் தீர்மானித்தார்.


நிதீஷ் குமாருக்கு ஒரு காலத்தில் மிக மிக நல்ல பெயர் இருந்தது. நேர்மையாளர், தெளிவானவர், ஊழலுக்கு எதிரானவர் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அவரது அடுத்தடுத்து அரசியல் பல்டிகள் அவரது பெயரை இப்போது வெகுவாக கெடுத்து விட்டதாக கருதப்படுகிறது.




ஆளுநரை சந்தித்து ராஜினாமா


இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பல்டி அடித்தார் நிதீஷ் குமார். ராஷ்டிரிய ஜனதாதளத்துடனான கூட்டணியை கைவிட்டு பாஜகவுடன் கை கோர்த்துள்ளார். கட்சி எம்எல்ஏக்களுடன் இன்று காலை இறுதியாக ஆலோசனை நடத்திய பின்னர் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நிதீஷ் குமார் சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை நிதீஷ் குமார் ஒப்படைத்தார்.


இதைத் தொடர்ந்து இன்று மாலையே மீண்டும் நிதீஷ் குமார் பாஜக ஆதரவுடன் மறுபடியும் ஆட்சியமைத்துள்ளார். மீண்டும் மீண்டும் அணி மாறி வரும் நிதீஷ் குமாருக்கு கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன. பச்சோந்திக்கே டப் கொடுக்கிறார் நிதீஷ்குமார் என்று காங்கிரஸ் கடுமையாக வசை பாடியுள்ளது. ராஷ்டிரிய ஜனதாதளம், நிதீஷ் குமாரை, குப்பை மீண்டும் குப்பைத் தொட்டிக்கே போய் விட்டது  என்று ஆவேசமாக வர்ணித்துள்ளது.


வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் போட்டியிடுவது தொடர்பான தொகுதிப் பங்கீட்டையும் கூட பாஜகவுடன், நிதீஷ் குமார் பேசி முடித்து விட்டதாகவும் சொல்கிறார்கள். நிதீஷ் குமார் நேரடியாக உள்துறை அமைச்சர் அமீத் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மட்டுமே பேசி அனைத்தையும் முடிவு செய்ததாக சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்