டெல்லி: மத்தியில் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனாலும் இன்றைய அவரது பட்ஜெட் உரையின் நீளம் சற்று குறைவுதான். 2020ம் ஆண்டுதான் அவர் நீண்ட நேரம் பேசி சாதனை படைத்திருந்தார்.
தொடர்ச்சியாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 முறையும், அதிகபட்சமாக 10 முறையும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இன்றுடன் தொடர்ச்சியாக 6 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலில் இதுவரையிலும் மிக நீளமான உரை என்றால் அது 2020ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் ஆற்றி உரை என்றே சொல்லலாம். அப்போது அவர் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு பேசினார். இடையில் அவருக்கு சோர்வும் வந்து விட்டது நினைவிருக்கலாம்.
மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 2வது இடம் பிடித்துள்ளார் ப.சிதம்பரம். 3வது இடத்தில் பிரணாப் முகர்ஜி உள்ளார். அவர் 8 முறை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 4வது இடம் பிடித்துள்ளார்.
அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்து முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களும் ஆண்கள் தான். பெண் நிதியமைசராக இருந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் நிர்மலா சீதாராமன் மட்டுமே.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}