சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், அந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று இரவு முழவதும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து, சென்னை நகரையே குளுமையாக்கி விட்டது. இந்த மழை தொடர்ந்து பெய்து, சென்னை மக்களை வெயிலின் கொடுமையில் இருந்து காப்பாற்றுமா என்பது தான் தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம், எல்லோ அலார்ட் விட்டு குட் நியூஸ் சொல்லி உள்ளது. சென்னை வானிலை மையமும், தெற்கு மற்றும் மேற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இனி வரும் நாட்கள் மழை பெய்வதற்கு வாய்ப்பு கிடையாது. அதே சமயம் வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுதாக தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் 40 முதல் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளில் 80 முதல் 90 மி.மீ., வரை மழை பதிவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. நகரில் சில பகுதிகளில் அதிகாலையிலும் கூட சாரல் மழை பெய்தது. இன்றும் சென்னையில் மிதமான மழை தொடரும் என சொல்லப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சொல்லப்படுகிறது.
வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் இவ்வளவு வெயில் சென்னையில் இருக்காது. ஏன் தமிழ்நாட்டிலும் கூட செப்டம்பரில் பெரிய அளவில் வெயில் இருக்காது. ஆனால் இந்த முறை வெயில் நடு மண்டையில் கோடாலியால் அடிப்பது போல கொடூரமாக அடித்து கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வட மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்திருப்பது மக்களை மகிழ்வித்துள்ளது.
செப்டம்பர் 26ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழக மக்களை வாட்டி வதைத்த கடும் வெயிலில் இருந்து விடுதலை கிடைக்கும் என தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!