"தப்பு நடந்திருச்சு.. ஸாரி".. கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்க நகரம்!

Mar 05, 2023,11:29 AM IST

நெவார்க், அமெரிக்கா: அமெரிக்காவின் நெவார்க் நகருக்கும், சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் "கைலாசா நாட்டுக்கும்" இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் துரதிர்ஷ்டவசமானது.. என்று கூறி அந்த நகர நிர்வாகம் தற்போது அதை ரத்து செய்துள்ளது.


கர்நாடகாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் நித்தியானந்தா.  ராம்நகர் கோர்ட்டில் இன்றும் கூட வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் தலைமறைவாகி விட்ட நித்தியானந்தா எங்கு போனார் என்றே தெரியவில்லை. அவர் நாட்டை விட்டே ஓடி விட்டார் என்பது பின்னர் தான் தெரிய வந்தது.



அதன் பின்னர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி விட்டதாக நித்தியானந்தா தரப்பு சமூக வலைதளங்களில் வடை சுட ஆரம்பித்ததும் புதிய பரபரப்பு உருவானது. இந்த நிலையில்  சமீப காலமாக அடுத்த லெவலுக்கு மாற  கைலாசா குரூப் முயற்சிப்பது தெரிய வந்தது. பல்வேறு நாட்டுக் குழுக்களுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்துவதாகவும், ஒப்பந்தம் போடுவதாகவும் சரமாரியாக டிவீட்டுகளைப் போட்டவண்ணம் இருந்தனர்.


உச்சகட்டமாக ஐ.நா.சபை கூட்டத்திலேயே கலந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து கைலாசா குரூப்பைச் சேர்ந்த விஜயப்ரியா நித்தியானந்தா என்பவர் பேசியது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக தாங்கள் பேசவில்லை என்றும் இந்து விரோத சக்திகளுக்கு எதிராகத்தான் பேசியதாகவும் விஜயப்பிரியா பின்னர் வீடியோ விளக்கம் அளித்தார்.


"எப்பவும் எனக்குத்தான்".. காதலியுடன் கலக்கல் போட்டோ வெளியிட்ட.. வீராங்கனை டேனியல் வியாட்!


இந்த நிலையில் கைலாசா குரூப், அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன் ஒப்பந்தம் செய்ததாக முன்பு ஒரு செய்தி வெளியானது. இந்த நிலையில்அந்த ஒப்பந்தத்தை நெவார்க் நகர நிர்வாகம் தற்போது ரத்து செய்து விட்டது.  இது மிகவும் வருத்தத்திற்குரிய சம்பவம்  என்று நெவார்க் நகரம் கூறியுள்ளது. ஜனவரி 12ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.  நெவார்க் நகரின் சென்டிரல் ஹாலில் வைத்து நித்தியானந்தா டீம் உறுப்பினர்களுடன் நெவார்க் நகர பிரதிநிதிகள் "சிஸ்டர் சிட்டி" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதைத்தான் தற்போது நெவார்க் நகரம் ரத்து செய்துள்ளது.


இதுகுறித்து நெவார்க் நகர தொடர்புத்துறை  செய்தித் தொடர்பாளர் சூசன் காராபோலோ கூறுகையில், கைலாசாவைச் சுற்றி நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து நெவார்க் சிட்டி மேற்கொண்ட நடவடிக்கையை ஜனவரி 18ம் தேதியே ரத்து செய்து விட்டோம்.  இது தேவையில்லாத, அடிப்படை இல்லாத ஒரு நிகழ்வு. வருத்தத்திற்குரியது.



சிஸ்டர் சிட்டி   கலாச்சாரத்தை சர்ச்சைக்குரியதாக மாற்ற  நாங்கள் விரும்பவில்லை.  இதுபோல இனி நடக்காது என்றார் அவர்.


சர்வதேச கவனத்தை ஈர்க்க கடுமையாக பிரயத்தனம் செய்து வருகிறார் நித்தியானந்தா. அதன் நடவடிக்கையாகவே இதுபோன்ற விவகாரங்களில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால்  தொடர���ந்து தோல்வியையே நித்தியானந்தா குரூப் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்