தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக.. புதிய வாட்ஸ் அப் குழுக்கள் தொடக்கம்

Mar 28, 2025,05:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 47 இடங்களில் whatsapp குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களின் பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை இந்த குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பல்வேறு அச்சுறுத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் சமீபத்தில் கோவையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அங்கிருந்த நபர் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் அந்தப் பெண்ணிற்கு படுகாயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் ரயிலில் பயணிக்கும் பெண்களின்  பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ‌




இதனைத் கருத்தில் கொண்டு  தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சமீபத்தில் தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் அச்சுறுத்தல்களை  தவிர்ப்பதற்காக whatsapp குழுக்கள் தொடங்க திட்டமிடப்பட்டது.


அதன்படி, தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக 47 இடங்களில் whatsapp குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயிலில் பயணிக்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள், அவசர உதவிகள், பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை இந்த whatsapp குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்