சென்னை : சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் அமைக்க டெண்டர் கோரியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பஸ் ஸ்டாண்டை தொடர்ந்து ரயில் நிலையமும் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட உள்ளதால் சென்னை மக்கள் குஷியாகி உள்ளனர்.
சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று அனைத்து வசதிகளுடன் இங்கேயும் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் சென்னை தென்பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ளது. இப்பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக நிலையில் உள்ளது. இருப்பினும், அங்கு தேங்கும் மழை நீர் வடிவதற்கு வசதி இல்லாமல் இருப்பதால் அதற்கான பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் இப்பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னை தேசியநெடுஞ்சாலையை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரயில் நிலையங்கள் தற்பொழுது எதுவும் இல்லை. இப்பகுதி மக்கள் ரயில் நிலையம் செல்ல வேண்டும் என்றால், வண்டலூர் தான் போக வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே தற்பொழுது தான் ஏற்று, டெண்டர் கோரியுள்ளது. ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க தெற்கு ரயில்வே திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரயில் நிலையம் 3 நடைமேடை கொண்ட ரயில் நிலையமாக அமைய உள்ளது. புற நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை போன்று இங்கும் அனைத்து வசதிகளும் இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இப்புதிய ரயில் நிலையம் இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதை போன்று, கிளாம்பாக்கத்தில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. தற்பொழுது சென்னை விமான நிலையம் வரை மட்டுமே மெட்ரோ ரயில் சேவை உள்ளது. அங்கிருந்து கிளாம்பாக்கம் வரை திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}