- மஞ்சுளா தேவி
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகம் முழுவதும் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்காக நமக்கு எப்படி இரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்ததோ .. அது போல் மழையும் இரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்தது. தற்போது மீண்டும் கன மழை தொடங்கியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்தது. இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். மேலும் வருகின்ற 17ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள பட்டய தேர்வுகள் மற்றும் டிப்ளமோ போன்ற தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த விபரம் https://dte.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}