சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கி வரும் மழையானது இன்று இரவு வரை தொடரும். நாளை காலை முதல் மழை நின்று விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஊர்களுக்குள் புகுந்துள்ளது. நெல்லையில் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறுகையில், இன்று இரவு வரை மழை நீடிக்கும். நாளை காலை முதல் மழை நின்று விடும். இந்த மாவட்டங்களைப் பொறுத்தவரை பற்றாக்குறை வட கிழக்குப் பருவ மழைதான் பெய்துள்ளது. பல அணைகள் நிரம்பவே இல்லை.
தூத்துக்குடியில் வெள்ளம் வருமோ என்ற அச்சமே தேவையில்லை. காரணம், பாபநாசம் (41சதவீதமே நிரம்பியுள்ளது), மணிமுத்தாறு (56 சதவீதமே நிரம்பியுள்ளது) அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. எனவே தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பில்லை. அந்த அணைகள் நிரம்பினால்தான் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றத்தை எதிர்பார்க்க முடியும். மேலும் தென்காசி அணைகளிலிருந்து வரும் தண்ணீரும் குறைந்து விட்டது. தற்போது தாமிரபணியில் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரும் மழை நின்றதும், நாளை குறைந்து விடும்.
வட கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 17ம் தேதிக்குப் பிறகு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை இதுகுறித்த தெளிவான நிலை தெரிய வரும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!
வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!
இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
{{comments.comment}}