நீட் நுழைவு தேர்வு அறிவிப்பு: எப்போது தேர்வு.. எப்படி விண்ணப்பிப்பது.. முழு விவரம்!

Feb 10, 2024,05:16 PM IST

சென்னை: 2024 ஆண்டுக்கான இளங்கலை நீட்தேர்வு நாடு முழுவதும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


2024 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இந்த தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


www.nta.ac.in, https://exams.nta.ac.in/NEET  இணையதளம் மூலம் ஆன்லைனில் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:




நீட் தேர்வு அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும். நீட் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.1700. ஓ. பி. சி பிரிவினருக்கு ரூ. 1600, மூன்றாம் பாலினத்தவற்கு ரூ.1000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 9, 2024  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


12ம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது முடிவுகள் எதிர்பார்க்கப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தனி தேர்வுகளாக தேர்ச்சி பெற்றவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பங்கேற்க தகுதி உள்ளவர்கள். 


தேர்வு மே 5.2014 அன்று நடத்தப்படும். தேர்வு நேரம்3 மணி 20 நிமிடங்கள்  நீட் யுஜிசிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். மேலும், தொடர்புடைய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய வலைதளத்தைப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்