வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

Apr 01, 2025,06:57 PM IST
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாத காலகட்டத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது‌ குறிப்பாக  தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் வெப்ப அலையும் அதிகமாக வீசுகிறது‌.இதனால் மக்கள் மதிய வேலைகளில் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாத காலகட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்.  கணித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:



நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட கூடுதலாக இருக்கும். மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் மட்டும் வழக்கமான பருவநிலை நீடிக்கும். ஏப்ரல் முதல் ஜூன் மாத காலகட்டத்தில் வழக்கமாக நான்கு முதல் ஏழு நாட்கள் வெப்ப அலை வீசும் நிலையில், இயல்பை விட வெப்ப அலை வீசும் நாட்கள் இரு மடங்காக அதிகரிக்கும்.

அதன்படி ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் நாட்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் எதிரொலியாக நாட்டில் மின்சார பயன்பாடு 9 முதல் 10 விழுக்காடு அதிகரிக்கும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்