புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது

Sep 17, 2023,11:47 AM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.


குடியரசுத் துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான ஜெகதீப் தங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹர்வன்ஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சியில் ஜெகதீப் தங்கர் பேசுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம். மாபெரும் மாற்றத்தை நாடு சந்தித்து வருகிறது. நமது சக்தி, திறமை, பங்களிப்பை உலகம் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளது. நாம் நமது காலத்தில் வாழ ஆரம்பித்துள்ளோம். நாம் கனவு கண்ட சாதனைகள், வளர்ச்சியை இந்தக் காலத்தில் நாம் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் என்றார் ஜெகதீப் தங்கர்.


காங்கிரஸ் பங்கேற்கவில்லை


தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்கவில்லை.  விழாவுக்கு மிகவும் தாமதமாக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் 75 வருட வரலாறு தொடர்பாக விவாதிக்கவும், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் இந்த சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் கூடும் இக்கூட்டம் நிறைவு நாளில் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்