விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்.. விரைவில் பூமிக்குத் திரும்புவார்.. நாசா கொடுத்த அப்டேட்

Feb 13, 2025,11:05 AM IST

வாஷிங்டன்: பூமிக்கு திரும்ப முடியாமல் கடந்த எட்டு மாதங்களாக சர்வதேச விண்வெளியில் மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஆய்வுக்காக  நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திருப்ப முடியாமல் 8 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். 


இவர்களை பூமிக்கு மீட்டு வருவதற்கு நாசா எலான் மாஸ்க்  உதவியை நாடியது. இதனை தொடர்ந்து இருவவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் நீடித்தது.




இதற்கிடையே சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 25 ஆம் தேதி  பூமிக்கு திரும்ப இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அதற்கு முன்னதாகவே பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.


அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை spacex நிறுவனத்தின் crew dragon capsule மூலம் வரும் மார்ச் 12 ஆம் தேதி பூமிக்கு அழைத்து வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பேக்எக்ஸ் நிறுவனம், எலான் மஸ்க்கின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக ஒன்றிணைந்தால் அனைவருக்கும் வாழ்வு... இல்லையேல் தாழ்வு... முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

news

தவெக ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டத்தை.. பிரம்மாண்டமாக நடத்த.. விஜய் உத்தரவு.. ரெடியாகும் ரசிகர்கள்

news

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம்தான் எடப்பாடி பழனிச்சாமி.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

news

கமல்ஹாசனுடன்.. நேற்று பி.கே.சேகர்பாபு.. இன்று உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. எம்.பி. சீட் இருக்கா?

news

கண்டக்டர் வேலைக்குக் காத்திருக்கும் பெண்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. உயர லிமிட் 150 செ.மீ ஆக குறைப்பு

news

ஆசிரியர்கள் மீது அதிகரிக்கும் பாலியல் புகார்கள்.. சிக்கினால் சிவியர் ஆக்ஷன்.. எச்சரிக்கும் அமைச்சர்

news

அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாதவர் எப்படி செங்கலை பிடுங்க முடியும்?: அமைச்சர் சேகர்பாபு

news

Mood of the Nation Poll: திமுக கூட்டணி செல்வாக்கு கிடுகிடு உயர்வு.. 39 சீட்டுகளையும் அள்ளுமாம்!

news

Gold rate.. நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு.... எவ்வளவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்