"எம்ப்டி"யாக காணப்பட்ட நரேந்திர மோடி ஸ்டேடியம்.. பிசிசிஐ அதிர்ச்சி!

Oct 05, 2023,04:26 PM IST

அகமதாபாத்: இந்தியாவின் மிகப் பிரமாண்டமான ஸ்டேடியமாக வர்ணிக்கப்படும் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியம் இன்றைய உலகக் கோப்பையின் முதல் போட்டியின் போது காலியாகக் கிடந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


சாதாரண  போட்டித் தொடராக இருந்தால் கூட பரவாயில்லை. இது உலகக் கோப்பைப் போட்டி. அதுவும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் உலககக் கோப்பைப் போட்டி. அப்படி பல  பெருமைகள் இருந்தும் கூட இன்றைய போட்டியின்போது ஸ்டேடியம் காலியாகக் கிடந்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.




2023 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. வழக்கமாக தொடக்க விழா நடைபெறும். ஆனால் இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. நேராக போட்டிக்குப் போய் விட்டனர். அதுவே ரசிகர்களை முதலில் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டது.


இந்த நிலையில் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதல் போட்டியைக் காண விரல் விட்டு எண்ணும் அளவுக்கே ரசிகர்கள் வந்திருந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.  முதல் போட்டியில் இந்தியா இல்லை என்பதாலும் பரபரப்பான  போட்டியாக இது இருக்காது என்ற எதிர்பார்ப்பாலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் டிக்கெட்கள் விற்கவே இல்லை. இதையடுத்து இலவசமாக டிக்கெட் தருகிறோம் பார்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து கூட்டம் சேர்த்துள்ளது குஜராத் கிரிக்கெட் சங்கம். இலவச டிக்கெட்டோடு டீ, சாப்பாடும் கூட கொடுத்துள்ளனர். அதுவும் இலவசம்தானாம்.


உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற பெருமை படைத்தது நரேந்திர மோடி ஸ்டேடியம். இதில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உட்கார முடியுமாம். இப்படிப்பட்ட ஸ்டேடியம் காற்று வாங்க காலியாகக் கிடந்தது பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. டிவிட்டரில் இதை வைத்து பலரும் டிரோல் செய்து வருகின்றனர். இந்தியாவில் இப்படி ஒரு உலகக் கிரிக்கெட் போட்டி நடந்ததே இல்லை. இப்படியா சொதப்புவீர்கள் என்று பலரும் கிண்டலடித்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்