அண்ணாமலை Vs சீமான்... பாஜக தனித்துப் போட்டியிடட்டுமே.. சீண்டும் நாம் தமிழர்!

Sep 03, 2023,01:02 PM IST

சென்னை: ரொம்ப நாட்களாகவே சீமான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.. எல்லாக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுங்க.. யார் பெரியவர்னு பார்த்துடலாம்னு..  இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சீண்டி அக்கட்சியினரிடம் விவாதத்தில் சிக்கியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


சீமானை கூட்டணியில் சேர்க்க ஆள் இல்லை. வெறுப்புக் கொள்கையை வைத்துக் கொண்டு நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது. நான் சீமான் சவாலை ஏற்கிறேன், பாஜக கட்சி அடுத்த தேர்தலில்  நாம் தமிழர் கட்சியை விட ஒரு சதவீதம் அல்ல.. 30 சதவீத வாக்குகளை கூடுதலாக வாங்கிக் கட்டும் என்று பேசியிருந்தார் அண்ணாமலை.




இதையடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் "தனித்துப் போட்டி" என்ற விவாதம் கிளம்பியுள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் இந்த விவாதத்தை மீண்டும் அனல் பறக்க விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.


"நாங்கள் ஆரம்பத்திலிருந்தே தனித்துதான் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் தனது கொள்கைகளை தைரியமாக முன்வைத்து தேர்தலில் யாருடனும் அணி சேராமல் போட்டியிட்டு வரும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். மேலும், பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுத்து சம அளவில் வேட்பாளர்களை நிறுத்தும் ஒரே கட்சியும் நாம் தமிழர் கட்சிதான். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் எங்களது கொள்கைகளை மட்டுமே தைரியமாக சொல்லி வாக்கு கேட்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான்.


தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறும், கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும், பெண்களுக்கு உரிய மரியாதை, பிரதிநிதித்துவம் தராத கட்சிகளுக்கு நாங்கள் சவால விடுகிறோம்.. எங்களைப் போலவே எல்லோரும் தனியாக நிற்கட்டும், தனித்துப் போட்டியிடட்டும்.. அப்போது ஜெயித்துக் காட்டட்டும்" என்று நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்துள்ளனர்.




குறிப்பாக அண்ணாமலையை அவர்கள் சவாலுக்கு இழுத்துள்ளனர். பாஜக தனித்துப் போட்டியிட தைரியம் இருக்கிறதா.. சீமானுடன் போட்டியிட அண்ணாமலை தயாரா.. நாங்க தயார்.. வாங்க எங்களை மாதிரி உங்களது கொள்கையை பகிரங்கமாக சொல்லி தனித்துப் போட்டியிடுங்க.. வாக்கு வாங்கிக் காட்டுங்க ஒத்துக்கிறோம் என்று அவர்கள் பதில் சவால் விட்டு வருகின்றனர்.


தமிழ்நாட்டைப் பொறுத்துவரை தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவது என்பது தற்கொலைக்குச் சமமானது. திமுக, அதிமுகவே தனித்துப் போட்டியிட அஞ்சிய காலம் உண்டு. ஜெயலலிதா இருந்தபோது ஒரு முறை அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. ஆனாலும் கூட ஜாதிப் பிரதிநிதித்துவம், சில ஜாதிக் கட்சிகளை உடன் சேர்த்துக் கொண்டு அவர்களையும் அதிமுக சின்னத்தில் போட்டியிட வைத்துத்தான் அக்கட்சி வென்றது. ஜாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை கனவிலும் கூட நடக்க முடியாதது. அதற்கு எந்தக் கட்சியும், திமுக உள்பட.. யாருமே தயாரில்லை என்பதே நிதர்சனம்.


திமுக முதல் பாஜக வரை, நாம் தமிழர் முதல் கம்யூனிஸ்ட் கட்சி வரை ஜாதிகளுக்கும்,பிராந்திய முக்கியத்துவத்துக்கும் மதிப்பளிக்காமல் தேர்தல்களை சந்திக்க முடிவதில்லை, அவர்கள் தயாரும் இல்லை. இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையிலான இந்த சவால், பதில் சவால் எழுந்துள்ளது.




சீமான் ஆரம்பத்திலிருந்தே தனித்துதான் போட்டியிட்டு வருகிறார். எல்லோரையும் தனித்துப் போட்டியிடுங்க என்றும் சவால் விட்டு வருகிறார். தேமுதிக உருவானபோது ஒருபோதும் யாருடனும் சேர மாட்டோம். ஆண்டவனுடனும், மக்களுடனும் மட்டும்தான் கூட்டணி என்று விஜயகாந்த் கூறினார். மக்களும் அதை நம்பினர். வாக்களித்து அக்கட்சிக்கு அங்கீகாரம் அளித்தனர். ஆனால் அதன் பின்னர் விஜயகாந்த் வார்த்தை மாறினார், தடம் புரண்டார், அதிமுகவுடன் சேர்ந்தார்.. அரசியலில் மதிப்பிழந்து போனார் என்பது நினைவிருக்கலாம்.


தற்போதைய சூழலில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு கட்சி, தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வருகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். வரும் நாட்களில் அண்ணாமலை  - சீமான் இடையிலான வார்த்தை மோதல்கள், கருத்து விவாதங்கள் எந்த அளவுக்கு சூடாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்