பொறந்தா சரிதா சல்தான்ஹா மேடம் வீட்டுல பொறக்கணும்.. வளர்ப்பு நாய்க்கு ரூ. 2.5 லட்சம் தங்கச் சங்கிலி!

Jul 08, 2024,05:53 PM IST

மும்பை:   மும்பையில் சரிதா சல்தான்ஹா என்ற பெண் தனது வளர்ப்பு நாய் டைகருக்கு 2.5 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை வாங்கி மாட்டிவிட்டு அழகு பார்த்துள்ளார். அந்த நாய்க்கு பிறந்த நாள் பரிசாக இந்த தங்கச் சங்கிலியாம். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


ஒரு மனிதனின் வாழ்வில் பிறந்தநாள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த பிறந்தநாளில் நமக்கு பிடித்த நபரை  இம்ப்ரஸ் செய்வதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரியாக பரிசளிப்பது வழக்கம். அப்படி ஒவ்வொருவரும் விதவிதமான பரிசுகளை தனது காதலன், காதலிக்கோ அல்லது தனது அன்பு மனைவிக்கோ அல்லது கணவருக்கோ, மற்றவர்களுக்கோ கொடுப்பதுண்டு. இதில் என்ன சுவாரசியம்.. இது உலக வழக்கம்தானே அப்படின்னுதானே யோசிக்கறீங்க. 


ஆனா இந்த பிறந்தநாள் பரிசுல ஒரு சுவாரசியம் உண்டு. இந்த பிறந்தநாள் பரிசு ஒரு மனிதருக்கு கிடையாது. ஒரு நாய்க்கு. நாய்க்கா... நாய்க்கு சாப்பாடு,  பால் கொடுக்கலாம் அல்லது அதற்கு பிடித்த உணவை கொடுக்கலாம்.. அது எப்படி பரிசு கொடுக்க முடியும் அப்படின்னுதானே கேக்குறீங்க.




பெரும்பாலானவர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது குறிப்பாக நாய்களின் மீது அதிக பாசமும் காதலும் வைத்துள்ளனர். நாய்களை தன் குழந்தைகளைப் போல் கவனித்துக் கொள்ளுதல், வெளியே எங்கு சென்றாலும் அதனையும் தன்னுடனே அழைத்துச் செல்லுதல்,  இப்படி நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் நிறையபேர் உள்ளனர். அதை விட அதை நாய் என்றே சொல்ல மாட்டார்கள்.. பிள்ளை, தம்பி, குட்டி என்றுதான் அழைக்கிரார்கள். இது தவிர நாய்களுக்கு மனிதர்களின்  பெயரை வைத்து அதற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழவும் செய்கிறார்கள்.


இப்படித்தான், மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் சரிதா சல்தான்ஹா. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை மிகவும் பாசமாகவும், அன்பாகவும் கவனித்து வருகிறார். அதற்கு  டைகர் எனவும் பெயரிட்டுள்ளார்.  அந்த டைகர் நாய்க்கு நேற்று பிறந்தநாள் வந்துள்ளது. டைகரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளனர். அந்த நாயை அருகே உள்ள அனில் ஜூவல்லரிக்கு அழைத்துச் சென்றார்.  நாயுடன் ஒரு பெண்மணி கடைக்கு வந்தவுடன் கடையில் பணிபுரிய ஊழியர்கள்  அதிர்ச்சி அடைந்தனர்.  கடைக்கு வரும் கஸ்டமரை கனிவுடன் கவனிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அங்குள்ள பணியாளர்கள் விதவிதமான தங்க செயினை அந்தப் பெண்ணிடம் காட்டி உள்ளனர். அந்த பெண் தங்கச் செயினில் ஒரு செயினை எடுத்து தனது வளர்ப்பு நாய்க்கு போட்டு அழகு பார்த்துள்ளார். அந்த தங்கச் செயினின் மதிப்பு ரூபாய் 2.5 லட்சம்.


அதன் பிறகுதான் கடைக்காரர்களுக்குப் புரிந்துள்ளது, அவர் செயின் வாங்க வந்தது தனது நாய்க்கு என்று. வினோதமான நிகழ்வை பார்த்ததும் ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்ததுடன் வீடியோவாக பதிவேற்றம் செய்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதுடன் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தங்க செயின் போட்டு இருக்காங்க.. பாத்து பத்திரமாக போங்க..  உங்கள் செல்ல நாயையும் பத்திரமாக பார்த்துக்கோங்க என கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்