இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு!

Aug 05, 2024,06:52 PM IST

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளின் கடும் வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவால் அடுத்த சில மாதங்களுக்கு பங்குச்சந்தை மிகவும் சவாலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,287.82 புள்ளிகள் சரிந்து 79.734.02 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 451.75 புள்ளிகள் சரிந்து 24,341.90 ஆக வர்த்தகமானது.




கடந்த மாதத்தில் வரலாற்று உச்சம் தொட்டு வந்த பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் கடும் சரிவடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதார நிலை, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலை வாய்ப்பு நிலை மோசம் அடைந்தது மற்றும் அந்நாட்டில் வேலை இன்மை 4.3% உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான், தென்கொரிய, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது. ஜப்பானில் வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்திய பங்குச்சந்தையில்  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பட்ஜெட் அறிவிப்பும் பங்குச்சந்தை முதலீட்டவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ஒரு டாலர் 83.75 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 15 லட்சம் 5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. bsc ரூபாய் 457 லட்சம் கோடியில் இருந்தது 447 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. சர்வதேச அளவிலான பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.


பங்குச்சந்தையில், அப்பல்லோ மருத்துவமனை மற்றும் சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடனும் வர்த்தகமானது. இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்